கிறிஸ்துவுக்கு அஞ்சி ஒருவருக்கொருவர் பணிந்திருங்கள்.மனைவியரே,ஆண்டவருக்குப் பணிந்திருப்பதுபோல உங்கள் கணவருக்குப் பநிந்திருங்கள. ஏனெனில் கிறிஸ்து திருச்சபைக்குத் தலையாய் இருப்பது போல கணவன் மனைவிக்குத் தலையாய் இருக்கிறான்.கிறிஸ்து திருச்சபையாகிய தம் உடலின் மீட்பர். அந்தத் திருச்சபை கிறிஸ்துவுக்குப் பணிந்திருப்பது போல மனைவியரும் கணவருக்கு அனைத்திலும் பணிந்திருத்தல் வேண்டும்.
கணவர்களே,கிறிஸ்து திருச்சபைக்கு அன்பு செய்ததுபோல் நீங்களும் உங்கள் மனைவியருக்கு அன்பு செய்யுங்கள்.ஏனெனில் கிறிஸ்து திருச்சபைக்கு அன்பு செய்து அதற்காக தம்மையே கையளித்தார். அத்திருச்சபையோ கறைதிரையோ வேறு எக்குறையோ இன்றி,பரிசுத்தமும் மாசற்றதுமாய்த் தம் திருமுன் மகிமையோடு துலங்கச் செய்யவேண்டுமென்று அவர் திருவார்த்தையாலும் முழுக்கினாலும் அதைத் தூயதாக்கிப் பரிசுத்தமாக்குவதற்குத் தம்மை கையளித்தார். அவ்வாரே கணவர்களும் தம் மனைவியரைத் தம் உடலெனக் கருதி அவர்களுக்கு அன்பு செய்யவேண்டும். மனைவிக்கு அன்பு காட்டுபவன் தனக்கே அன்பு காட்டுகிறான். தன்னுடலை எவனும் என்றும் வெறுப்பதில்லை,எவனும் அதைப் பேணிவலர்க்கிறான், கிறிஸ்துவும் அவ்வாறே திருச்சபையை பேணி வளர்க்கிறார்.ஏனெனில் நாம் அவரது உடலின் உறுப்புக்கள். அதனால் கணவன் தன தாய் தந்தையை விட்டுவிட்டு தன மனைவியோடு கூடி இருப்பான்.இருவரும் ஒரே உடலை இருப்பார்கள். இதில் அடங்கயுள்ள மறை உண்மை பெரிது. இது கிறிஸ்துவுக்கும் திருச்சபைக்கும் பொருந்தும் என்று நான் கூறுகின்றேன்.
சுருங்கக் கூறின், உங்களில் ஒவ்வருவனும் தன மீது அன்பு காட்டுவதுபோல தன மனைவி மீது அன்பு காட்டுவானாக. மனைவியும் தன கணவனுக்கு அஞ்சி நடப்பாளாக.
பிள்ளைகளே.ஆண்டவருக்குள் பெற்றோருக்குக் கீழ்ப்படிந்திருங்கள். இதுவே முறை. தாய் தந்தையைப் போற்று என்பதே வாக்குறுதியோடு கூடிய கட்டளைகளுள் முதலாவது. அப்போது மண்ணுலகில் நீ நலம் பெறுவாய். நீடூழி வாழ்வை என்பது அவ்வாக்குறுதி. தந்தையரே உங்கள் பிள்ளைகளுக்கு சினம் மூட்டாதீர்கள். அவர்களை கண்டித்துத் திருத்தி, ஆண்டவருக்கேற்ற முறையில் அறிவு புகட்டி வளர்த்தல் வேண்டும்.
மனிதர்களுக்கு உகந்தவர்கலாகலாம் என்று, கண்முன் மட்டும் உள்ழைப்பவர்களாய் இராமல், கிறிஸ்துவின் ஊழியர்களென, கடவுளுடைய திருவுளத்தை மனதார நிறைவேற்றுங்கள். நன்மை செய்யும் ஒவ்வருவனும் ஆண்டவரிடமிருந்து கைம்மாறு பெறுவான்.
பிள்ளைகளே.ஆண்டவருக்குள் பெற்றோருக்குக் கீழ்ப்படிந்திருங்கள். இதுவே முறை. தாய் தந்தையைப் போற்று என்பதே வாக்குறுதியோடு கூடிய கட்டளைகளுள் முதலாவது. அப்போது மண்ணுலகில் நீ நலம் பெறுவாய். நீடூழி வாழ்வை என்பது அவ்வாக்குறுதி. தந்தையரே உங்கள் பிள்ளைகளுக்கு சினம் மூட்டாதீர்கள். அவர்களை கண்டித்துத் திருத்தி, ஆண்டவருக்கேற்ற முறையில் அறிவு புகட்டி வளர்த்தல் வேண்டும்.
மனிதர்களுக்கு உகந்தவர்கலாகலாம் என்று, கண்முன் மட்டும் உள்ழைப்பவர்களாய் இராமல், கிறிஸ்துவின் ஊழியர்களென, கடவுளுடைய திருவுளத்தை மனதார நிறைவேற்றுங்கள். நன்மை செய்யும் ஒவ்வருவனும் ஆண்டவரிடமிருந்து கைம்மாறு பெறுவான்.
எபேசியர்:5 :21- 6 : 4
No comments:
Post a Comment