Thursday, January 6, 2011

COUPLES ARE UNITED FOR EVER

ஒரு முறை ஒரு தம்பதியர் ஒரு வயதான கிறிஸ்துவ பாதிரியாரை பார்க்க அந்த சர்ச்சுக்கு வந்தார்கள்.என்ன விஷயம் என்று அவர் அந்த தம்பதியிடம் கேட்டார்.அதற்க்கு அந்த பெண் பாதர், இவர் எனது கணவர்.எங்களுக்கு திருமணம் ஆகி இருவது வருடம் ஆகிவிட்டது.இந்த ஆளோடு இத்தனை வருஷம் கஷ்ட்டப்பட்டு குடும்பம் நடத்திவிட்டேன்.இனி இந்த ஆளோடு ஒரு நிமிஷம்கூட குடும்பம் நடத்த முடியாது.எனெவே  எங்க ரெண்டு பேரையும் பிரிச்சுவிட்டுடுங்க.டைவோர்சே முதல்ல கொடுங்க என்றார்.அதற்க்கு அந்த ஆள்,சாமீ,நான் சொல்றத மொதல்ல கேளுங்க.இவகூட நான் இருந்த ஒவ்வொரு நிமிஷமும் நரகம் தான்.இந்த நிமிஷமே எனக்கு இவள்ட்ட இருந்து எனக்கு விடுதலை  கொடுங்க என்றார்.
அந்த பாதிரியார்,அப்படியா,ரெண்டு பேரும் மொதல்ல ,என் முன்னாள் மொழங்கால் போடுங்க,என்றார்.அவங்க ரெண்டு பேரும் அவர் முன்னாள் மொழங்கால் போட்டாங்க.அந்த பாதிரியார்,தீர்த்த சொம்ப,அதன் கீழ்ப்பாகம்(குண்டாக இருக்கும் பகுதி) மேலே இருக்கும்மாறு அதன் மேல் பகுதிய பிடுச்சு அவரது வலது கையாள தூக்கிப் பிடுச்சுகிட்டார்.தன இடது கையில் அவரது கட்டளை ஜெப புத்தகத்தைப் பிடிச்சுகிட்டு நின்றார்.ரெண்டு பேரும் கண்ணை மூடி ஜெபம் பண்ணுங்க என்று ,கட்டளை ஜெப புத்தகத்திலிருந்து ஒரு சிறிய ஜெபம் செய்துவிட்டு,அந்த தீர்த்த சொம்பினால் அந்த ஆளின் நடு மண்டையில் ஓங்கி ஒரு போடு போட்டார்.ஐயோ என்று அந்த ஆள் கத்தினான்,அதற்க்கு பாதிரியார்,ஏய்,சத்தம் வெளியே வரக்கூடாது,மூச்,என்று,அவர் மீண்டும் ஒரு சிறிய செபத்தை சொல்லிவிட்டு, அந்த தீர்த்த சொம்பினால்,அந்த பொம்பளையின் நடு மண்டையில் ஓங்கி ஒரு போடு போட்டார்.ஐயோ,சாமீ,உசுரு போகுதே என்று அந்த பொண்ணு கதறினாள்.இப்படியாக,அந்த பாதிரியார்,விடாமல்,ஒருவர் மாற்றி ஒருவரின் மண்டையில் தீர்த்தசொம்பை வைத்து போடு போடு என்று விலாசிக்கொண்டு இருந்த்தார்.
அப்போது அந்த இருவரும்,சாமீ,இந்த பூச எப்ப முடியும் என்றனர்.அதற்க்கு அந்த பாதிரியார்,ஒங்க ரெண்டுபேர்ல ஒருத்தர் மண்டையப் போட்டாத்தான்,இந்த பூச முடியும்,அதனால,இப்ப ரெண்டு பேரும் இப்படி பூசைக்கு இடையில் பேசி தொந்தரவு கொடுக்காம,கண்ணா மூடிட்டு இருங்க.என்று மறுபடியும் ஜெபம் பண்ண ஆரம்பிச்சார்.
அப்பா அந்த ரெண்டு பேரும்,இவருக்கிட்ட அடிவாங்கி சாகுறதுக்கு, பேசாம நாம ரெண்டு பேரும் சமாதானமா ஒண்ணா சேர்ந்து வாழலாம் என்று அங்கிருந்து ஓடிப்போயட்டாங்க  .

நீதி என்னவென்றால்.
விட்டுக்கொடுத்து ,மன்னிச்சு,புருஞ்சிக்கிட்டு,சமாதானமா வாழ்த்தால்,இந்த பூசையே தேவை இருக்காது.
சண்டையில் விட்டுக்கொடுக்கின்றவர் மற்றவரை தக்கவைத்துகொள்வார்.
சண்டையில் ஜெயிப்பவர் மற்றவைரை இழந்து விடுவார்.
விட்டுக்கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை.
சண்டையில் முதலில் வாயை மூடுபவர்கள்,நல்ல குடும்பத்தில் பிறந்தவர்கள்.

Wednesday, January 5, 2011

THE BIBLE SAYS ABOUT PARENTS AND CHILDREN

குடும்ப ஒழுக்கம்
கிறிஸ்துவுக்கு அஞ்சி ஒருவருக்கொருவர் பணிந்திருங்கள்.மனைவியரே,ஆண்டவருக்குப் பணிந்திருப்பதுபோல உங்கள் கணவருக்குப் பநிந்திருங்கள. ஏனெனில் கிறிஸ்து திருச்சபைக்குத் தலையாய்  இருப்பது போல கணவன் மனைவிக்குத் தலையாய் இருக்கிறான்.கிறிஸ்து திருச்சபையாகிய தம் உடலின் மீட்பர். அந்தத் திருச்சபை கிறிஸ்துவுக்குப் பணிந்திருப்பது போல மனைவியரும் கணவருக்கு அனைத்திலும் பணிந்திருத்தல் வேண்டும்.
கணவர்களே,கிறிஸ்து திருச்சபைக்கு அன்பு செய்ததுபோல் நீங்களும் உங்கள் மனைவியருக்கு அன்பு செய்யுங்கள்.ஏனெனில் கிறிஸ்து திருச்சபைக்கு அன்பு செய்து அதற்காக தம்மையே கையளித்தார். அத்திருச்சபையோ கறைதிரையோ வேறு எக்குறையோ இன்றி,பரிசுத்தமும் மாசற்றதுமாய்த் தம் திருமுன் மகிமையோடு துலங்கச் செய்யவேண்டுமென்று அவர் திருவார்த்தையாலும் முழுக்கினாலும் அதைத் தூயதாக்கிப் பரிசுத்தமாக்குவதற்குத் தம்மை கையளித்தார். அவ்வாரே கணவர்களும் தம் மனைவியரைத் தம் உடலெனக் கருதி அவர்களுக்கு அன்பு செய்யவேண்டும். மனைவிக்கு அன்பு காட்டுபவன் தனக்கே அன்பு காட்டுகிறான். தன்னுடலை எவனும் என்றும் வெறுப்பதில்லை,எவனும் அதைப் பேணிவலர்க்கிறான், கிறிஸ்துவும் அவ்வாறே திருச்சபையை பேணி வளர்க்கிறார்.ஏனெனில் நாம் அவரது உடலின் உறுப்புக்கள். அதனால் கணவன் தன தாய் தந்தையை விட்டுவிட்டு தன மனைவியோடு கூடி இருப்பான்.இருவரும் ஒரே உடலை இருப்பார்கள். இதில் அடங்கயுள்ள மறை உண்மை பெரிது. இது கிறிஸ்துவுக்கும் திருச்சபைக்கும் பொருந்தும் என்று நான் கூறுகின்றேன்.
சுருங்கக் கூறின், உங்களில் ஒவ்வருவனும் தன மீது அன்பு காட்டுவதுபோல தன மனைவி மீது அன்பு காட்டுவானாக. மனைவியும் தன கணவனுக்கு அஞ்சி நடப்பாளாக. 
பிள்ளைகளே.ஆண்டவருக்குள் பெற்றோருக்குக் கீழ்ப்படிந்திருங்கள். இதுவே முறை. தாய் தந்தையைப் போற்று என்பதே வாக்குறுதியோடு கூடிய கட்டளைகளுள் முதலாவது. அப்போது மண்ணுலகில் நீ நலம் பெறுவாய். நீடூழி வாழ்வை என்பது அவ்வாக்குறுதி. தந்தையரே உங்கள் பிள்ளைகளுக்கு சினம் மூட்டாதீர்கள். அவர்களை கண்டித்துத் திருத்தி, ஆண்டவருக்கேற்ற முறையில் அறிவு புகட்டி வளர்த்தல் வேண்டும்.
மனிதர்களுக்கு உகந்தவர்கலாகலாம் என்று, கண்முன் மட்டும் உள்ழைப்பவர்களாய்  இராமல், கிறிஸ்துவின் ஊழியர்களென, கடவுளுடைய திருவுளத்தை மனதார நிறைவேற்றுங்கள். நன்மை செய்யும் ஒவ்வருவனும் ஆண்டவரிடமிருந்து கைம்மாறு பெறுவான்.
                                                                                          எபேசியர்:5 :21- 6 : 4